போக்குவரத்துக்கு இடையூறு

Update: 2024-01-07 07:02 GMT

போக்குவரத்துக்கு இடையூறு

கொல்லங்கோடு நகராட்சிக்கு உட்பட்ட மஞ்சத்தோப்பு சந்திப்பில் இருந்து மஞ்சத்தோப்பு காலனிக்கு செல்லும் பிரதான சாலை உள்ளது. இந்த சாலையில் தென்னைமரம் ஒன்று வாகன போக்குவரத்துக்கு இடையூறாக நிற்கிறது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, போக்குவரத்துக்கு இடையூறாக காணப்படும் தென்னை மரத்தை அகற்றிட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சந்தோஷ்குமார், அம்பலக்குளம்

மேலும் செய்திகள்