இறைச்சிக்கழிவுகளால் சுகாதார சீர்கேடு

Update: 2023-12-31 18:09 GMT
சங்கராபுரம்-பூட்டை செல்லும் வழியில் அரசு தொழிற்பயிற்சி மையம் அருகில் சாலையோரத்தில் இறைச்சிக்கழிவுகள் மற்றும் குப்பைகள் அதிக அளவில் கொட்டப்படுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு கடும் துர்நாற்றம் வீசுவதால், பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும் இதன் காரணமாக அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்