பள்ளிக்கு புதிய கட்டிடம் தேவை

Update: 2023-12-31 18:07 GMT
ரெட்டிச்சாவடி அருகே கிளிஞ்சிக்குப்பம் ஊராட்சியில் இருந்த ஆதிதிராவிட நல அரசு தொடக்கப்பள்ளி சேதமடைந்த காரணத்தால் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இடிக்கப்பட்டது. ஆனால், தற்போது வரை புதிய கட்டிடம் கட்டித்தர அதிகாாிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் தற்காலிகமாக அதே பகுதியில் உள்ள ஊராட்சி அலுவலகத்தில் மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெறுகிறது. இதன் காரணமாக மாணவர்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே அரசு பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டித்தர அதிகாாிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்