புகார்பெட்டி செய்தி எதிரொலி

Update: 2023-12-31 18:06 GMT
கடலூர் புதுக்குப்பம் பகுதியில் உள்ள தெருமின்விளக்குகள் பழுதான காரணத்தால் எரியாமல் இருந்தது. இதனால் அப்பகுதி முழுவதும் இருளில் மூழ்கி கிடந்ததால், குற்றச்சம்பவங்கள் நடைபெறும் அபாயம் உருவானது. இதுகுறித்த செய்தி தினத்தந்தி புகார்பெட்டியில் வெளியானது. இதையடுத்து மின்வாரிய அதிகாரிகள் தெருமின்விளக்கை சீரமைத்து நடவடிக்கை மேற்கொண்டனர். இதில் மகிழ்ச்சி அடைந்த பொதுமக்கள் தினத்தந்திக்கும், அதிகாரிகளுக்கும் நன்றி தொிவித்தனர்.

மேலும் செய்திகள்