கூடுதலாக பஸ் வசதி கிடைக்குமா?

Update: 2023-12-31 12:00 GMT

காஞ்சீபுரம் சோமங்கலம் பகுதிக்கு தாம்பரத்தில் இருந்து பஸ் இயக்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது, தாம்பரத்திலிருந்து சோமங்கலம் வழியாக குன்றத்தூர் வரையில் இயக்கப்படுகிறது. இதனால், பஸ்சில் பொதுமக்கள் பயணிக்க போதுமான இட வசதி இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. அதிக அளவு கூட்ட நெறிசல் ஏற்படுகிறது. மேலும், பஸ் சரியான நேரத்திற்கு செல்லாமல் இருப்பதால் பொதுமக்கள் மற்றும் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே, தாம்பரத்தில் இருந்து சோமங்கலம் பகுதிக்கு கூடுதலாக பேருந்து இயக்க போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்