சென்னை வேளச்சேரி, தண்டீஸ்வரம் பேருந்து நிழற்குடை சிதிலமடைந்து ௨டைந்துவிழும் நிலையில் இருந்தது. இதுகுறித்து 'தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியானதும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் புதிய பயணிகள் நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுத்தார்கள். உடனடியாக நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், துணை நின்ற ‘தினத்தந்தி‘-க்கும் அப்பகுதி பொதுமக்கள் பாராட்டை தெரிவித்துள்ளனர்.