கடலூர் மாநகராட்சி பகுதியில் கொசுத்தொல்லை நாளுக்கு, நாள் அதிகரித்து வருகிறது. இதனால் இரவில் மாநகர மக்கள் தூங்க முடியாமல் அவதி அடைந்து வருகின்றனர். குறிப்பாக கொசுக்கடிப்பதால், மாநகர மக்களுக்கு டெங்கு, மலேரியா உள்ளிட்ட தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. எனவே கடலூர் மாநகராட்சி பகுதியில் கொசுமருந்து அடிக்க வேண்டியது அவசியம்.