மயானப்பகுதிக்கு அடிப்படை வசதி தேவை

Update: 2023-12-17 18:19 GMT
புவனகிரி அருகே மேல குறியாமங்கலம் கிராமத்தில் உள்ள ஆதிதிராவிடர் பகுதியில் மயானப்பகுதி உள்ளது. இந்த மயானப்பகுதியில் கருமக்காரிய கட்டிடம், சுற்றுச்சுவர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. குறிப்பாக மயானத்தை சுற்றி கருவேலமரங்கள் அதிக அளவில் வளர்ந்துள்ளதால், இறந்தவர்களின் உடலை கொண்டு செல்ல அப்பகுதி பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே மயானப்பகுதியில் அனைத்து அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தருவதோடு, கருவேலமரங்களையும் அகற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்