வருசநாடு கிராமத்தில் மூல வைகை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட தடுப்பணை பராமரிப்பு இல்லாததால் சிதிலமடைந்து வருகிறது. இதனால் தடுப்பணையில் தண்ணீரை தேக்கி வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பாசனத்துக்கு போதிய அளவில் தண்ணீர் கிடைக்காமல் விவசாயிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே தடுப்பணையை உடனடியாக சீரமைக்க வேண்டும்.