புதர்மண்டி கிடக்கும் கழிவறை கட்டிடம்

Update: 2023-12-17 12:11 GMT

தஞ்சை மாவட்டம் திருவையாறு தாலுகா திருவாலம்பொழில் பகுதியில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக கழிவறை கட்டிடம் கட்டப்பட்டது. இந்த கட்டிடம் தற்போது முறையான பராமரிப்பின்றி செடி,கொடிகள் வளர்ந்து கிடக்கிறது. இதனால் பொதுமக்கள் பொது கழிவறை கட்டிடத்தை பயன்படுத்த முடியாத சூழல் நிலவுகிறது. மேலும், கழிவறை கட்டிடங்கள் விஷப்பூச்சிகளின் கூடாரமாக மாறிவருகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள கழிவறை கட்டிடத்தை சுத்தம் செய்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு மீண்டும் கொண்டு வர நடவடிக்கை எடுப்பார்களா

மேலும் செய்திகள்