பராமரிக்கப்படாத கழிவறை

Update: 2023-12-17 10:52 GMT

திருச்சி மாவட்டம், மணப்பாறை பஸ் நிலையத்திற்கு தினமும் ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர். இவர்களின் வசதிக்காக பஸ் நிலையத்தில் பொதுக்கழிவறை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கழிவறை சீரமைக்கப்படாமல் அசுத்தம் செய்யப்பட்டநிலையில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் இந்த கழிவறையை பயன்படுத்துபவர்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து கழிவறையை பராமரிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்