டாஸ்மாக் கடையால் மாணவிகள் அச்சம்

Update: 2023-12-03 17:47 GMT
சங்கராபுரம் அருகே கடுவனூரில் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு செல்லும் சாலையில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இந்த கடையில் மதுவாங்கி குடிக்கும் மதுபிரியர்கள், போதை தலைக்கேறியதும் அந்த வழியாக செல்லும் மாணவிகளிடம் தகராறில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் மாணவிகள் பள்ளிக்கு செல்ல பெரும் அச்சமடைந்து வருகின்றனர். எனவே அந்த டாஸ்மாக் கடையை உடனே அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்