வேகத்தடை அமைக்க வேண்டும்

Update: 2023-12-03 17:44 GMT
கடலூரில் வண்டிப்பாளையம் சாலையில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியின் முன்பு செல்லும் நெடுஞ்சாலையில் கனரக வாகனங்கள் முதல் இருசக்கர வாகனங்கள் வரை எப்போதும் போக்குவரத்து மிகுந்து காணப்படும். இவைகளின் வேகத்தை கட்டுப்படுத்த பள்ளி முன்பு வேகத்தடை இல்லாத காரணத்தினால், பள்ளிக்கு தங்களது குழந்தைகளுடன் செல்லும் பெற்றோர், சாலையை கடக்க சிரமப்படுகிறார்கள். சில நேரங்களில் விபத்துகளும் நேர்ந்து விடுகிறது. இதனால் விபரீதங்கள் ஏதேனும் ஏற்படும் முன்பு அந்தபகுதியில் வேகத்தடை அமைத்தால், நாட்டின் எதிர்காலமான மாணவசெல்வங்கள் பயமின்றி சாலையை கடந்து சென்று வருவார்கள். அதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்