சேதமடைந்த பயணிகள் நிழற்குடை அகற்றப்படுமா?

Update: 2023-12-03 17:43 GMT
புவனகிரி ஒன்றியம் வடதலைக்குலம் கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை அகற்றும் பணியின் போது அருகில் இருந்த பயணிகள் நிழற்குடை சேதமடைந்தது. தற்போது மழைக்காலம் என்பதால் எப்போது வேண்டுமானாலும் கட்டிடம் இடிந்து விழுந்து உயிர் சேதம் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் கீழே விழுந்து கிடக்கும் மேல்நிலைநீர்த்தேக்க தொட்டியையும் அகற்றவில்லை. இதனால் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதால், இடிந்து விழும் நிலையில் உள்ள பயணிகள் நிழற்குடை மற்றும் கீழே விழுந்து கிடக்கும் மேல்நிலைநீர்த்தேக்க தொட்டியையும் அகற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்