தெருநாய்கள் தொல்லை

Update: 2023-12-03 15:34 GMT

திருச்சி மாவட்டம், மணப்பாறை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தெருநாய்களின் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது. எங்கு திரும்பினாலும் சுமார் 15-க்கும் மேற்பட்ட நாய்கள் ஒவ்வொரு இடத்திலும் கூட்டமாக சுற்றித்திரிகின்றது. சாலையில் வாகனங்கள் செல்லும் போது திடீரென நாய்கள் குறுக்கே செல்வதால் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகி உயிர் பலி வரை ஏற்பட்டு விட்டது. மேலும் மாணவ-மாணவிகள் சாலையில் செல்ல பெரிதும் அச்சப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்