விபத்து அபாயம்

Update: 2023-12-03 13:06 GMT

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாய்களின் தொல்லை அதிகமாக உள்ளது. இவை சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகளை அச்சுறுத்துகிறது. மேலும் வாகனத்தின் குறுக்கே பாய்வதால் வாகன ஓட்டிகள் கீழே விழுந்து காயம் அடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்