அகற்றப்படாத நீர்த்தேக்க தொட்டி இடிபாடுகள்

Update: 2023-11-26 15:05 GMT

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே மைலன்கோன்பட்டி கிராமம் உள்ளது. இங்குள்ள ஆதிதிராவிடர் தெருவில் பழுதடைந்து செயல்படாமல் இருந்த 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி கடந்த பிப்ரவரி மாதம் 2-ந் தேதி பொக்லைன் எந்திரம் மூலம் இடிக்கப்பட்டது. அதன் கட்டுமானங்கள் தற்போது வரை அகற்றப்படவில்லை. பாதையில் இடிபாடுகள் சிதறி கிடக்கின்றன. இதனால் அப்பகுதியில் உள்ளவர்கள் பாதையை பயன்படுத்த முடியாமல் சிரமத்தில் உள்ளனர். எனவே கட்டிட இடிபாடுகளை அகற்றி, பொது பாதையை முறைப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்