கொசுத்தொல்லை

Update: 2023-11-26 10:11 GMT

திருவாரூர் மாவட்டம் மாங்குடியை அடுத்த ராதாநல்லூர், ஆத்தூர் பகுதியில் கொசுத்தொல்லை அதிகளவில் இருக்கிறது. இதனால் இரவு நேரங்களில் பொதுமக்கள் தூக்கமின்றி தவித்து வருகின்றனர். காரணம் மழைக்காலங்களில் மழைநீர் குடியிருப்பு பகுதியை சுற்றிலும் தேங்கி நிற்கிறது. மழைநீரில் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகின்றன. இவற்றால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் மழைநீர் தேங்காமல் இருக்கவும், கொசுமருந்து அடிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்