போக்குவரத்து நெருக்கடி

Update: 2023-11-26 07:45 GMT
செங்கோட்டை- கொல்லம் தேசிய நெடுஞ்சலையில் வனத்துறை அலுவலகம் அருகில் வாய்க்காலின் குறுக்கே புதிய பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் அங்கு குறுகிய சாலையிலே வாகனங்கள் செல்வதால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. இதன் அருகில் தென்காசி, பண்பொழி செல்லும் சாலைகளும் பிரிந்து செல்வதால், அந்த வழியாக வாகனங்கள் கடப்பதற்கு நீண்ட நேரமாகிறது. எனவே அங்கு போக்குவரத்தை போலீசாரை நியமித்து, வாகன நெரிசலை சரி செய்வதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்