ஆபத்தான குழி மூடப்படுமா?

Update: 2023-11-26 07:44 GMT
வீரகேரளம்புதூர் தாலுகா கீழக்கலங்கல்- சுரண்டை சாலையில் சர்ச் தெரு சின்டெக்ஸ் குடிநீர் தொட்டி அருகில் குழாயை சீரமைப்பதற்காக தோண்டப்பட்ட குழியை மூடாமல் சென்று விட்டனர். இதனால் அந்த வழியாக செல்கிறவர்கள் குழிக்குள் தவறி விழும் அபாயம் உள்ளது. எனவே ஆபத்தான குழியை மூடுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும் செய்திகள்