பக்கச்சுவர் தேவை

Update: 2023-11-26 07:41 GMT

அருமனை பேருராட்சி 15-வது வார்டு கண்டன்சிறை கால்வாயில் ஆலறைவிளை பாலம் உள்ளது. இந்த பாலம் அருமனை, முழுக்கோடு,வெள்ளாங்கோடு ஆகிய 3 பகுதிகளை இணைக்கும் முக்கிய பாலம். இந்த பாலம் வழியாக தான் அருமனை அரசு ஆஸ்பத்திரி, அரசு பள்ளிக்கு செல்ல முடியும். ஆனால், பாலம் வேலை முடிந்து பல ஆண்டுகள் ஆகியும் இதுவரை பாலத்தின் பக்கச்சுவர் அமைக்கப்படவில்லை. இதனால் மக்கள் பல கிலோ மீட்டர் சுற்றி போக வேண்டியதாக உள்ளது. எனவே, பாலத்தின் பக்கச்சுவர் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஜெயசிங், கண்டன்சிறை. 

மேலும் செய்திகள்