தெருநாய்கள் தொல்லை

Update: 2023-11-19 16:42 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை 5-வது வார்டில் தெருநாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றித் திரிகின்றன. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொது மக்கள் வெளியே செல்ல அச்சப்படுகின்றனர். மேலும் வாகனங்களில் செல்வோரை துரத்துவதால் அவர்கள் கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே இந்த தெருநாய்களை பிடித்து செல்ல வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-ஜிலானி பாஷா, தேன்கனிக்கோட்டை, கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்