சென்னை குளத்தூர், ரெட்டேரி அடுத்த பஸ் நிலையத்தின் மேற்கூரை மிகவும் சேதமடைந்து உள்ளது. இதனால் மழைநேரங்களில் அங்கு பஸ் ஏறுவதற்காக பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். மேலும் சேதமடைந்த மேற்கூரை வழியாக மழைநீர் வருவதால் முழுவதுமாக நனைந்து விடுகின்றனர். எனவே, உரிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து மேற்கூரையை புதிதாக அமைத்து தர வேண்டும்.