திறந்த நிலையில் மழைநீர் வடிகால்

Update: 2023-11-19 11:09 GMT

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் திருக்கடையூர் காலனி மெயின் சாலையோரத்தில் மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மழைநீர் வடிகால் திறந்த நிலையில் இருக்கிறது. இதனால் வடிகாலுக்குள் தேங்கும் மழைநீரில் கொசுக்கள் உற்பத்தியாகின்றன. இவற்றால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும், வடிகால் திறந்த நிலையில் இருப்பதால் அந்த வழியாக செல்லும், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி வடிகாலுக்குள் விழுந்து விடுகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பிரச்சினைக்கு உரிய தீர்வு காண வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.


மேலும் செய்திகள்