விபத்து அபாயம்

Update: 2023-11-19 10:32 GMT

குளச்சல் வாணியக்குடி அருகே சலேட்நகர் பகுதியில் அங்கன்வடி மையம் செல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் அந்த பகுதியை சேர்ந்த ஏராளமான குழந்தைகள் படித்து வருகின்றனர். இந்த மையத்தின் வளாகத்தில் உள்ள பொது கிணற்றின் மீது அமைக்கப்பட்டுள்ள மூடி சேதமடைந்து காணப்படுகிறது. மேலும், கிணற்றின் உள்ளேயும் சீரமைப்பு பணி முடிவு பெறாமல் உள்ளது. இதனால், அங்கன்வாடிக்கு செல்லும் குழந்தைகள் நிலைதடுமாறி விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, கிணற்றை முறையாக தூர்வாரி அதன் மேல் புதிய மூடி அமைத்து பயன்பாட்டுக்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஆனந்த், ஆலஞ்சி.

மேலும் செய்திகள்