தடுப்புச்சுவர் அமைக்கப்படுமா?

Update: 2023-10-29 15:12 GMT

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை அடிவாரம் வெண்டாங்கி பகுதியில் வாய்க்கால் பகுதியில் தரைப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. அதன் இரு பக்கங்களிலும் தடுப்பு சுவர் அமைக்கப்படாமல் உள்ளது. இதனால் இரவு நேரங்களில் அந்த தரைபாலம் வழியாக வேகமாக வரும் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்துகளில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே தரைபாலத்தின் இரு புறங்களிலும் தடுப்புச்சுவர் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

-சேகர், வெண்டாங்கி.

மேலும் செய்திகள்