குரங்குகள் தொல்லை

Update: 2023-10-29 11:57 GMT

நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா துளசியாப்பட்டினம் பகுதியில் குரங்குகள் தொல்லை அதிகளவில் உள்ளது. இவை அந்த பகுதியில் உள்ள வீடுகளுக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. மரங்களில் ஏறி பழங்கள், தேங்காய்களை பறித்து வீசிச்செல்கின்றன. மேலும், கூட்டமான சாலையில் அங்கும்,இங்கும் சுற்றித்திரிவதால் வாகன ஓட்டிகளும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பொதுமக்கள், மாணவ-மாணவிகள் நலன் கருதி மேற்கண்ட பகுதியில் சுற்றித்திரியும் குரங்குகளை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்