பஸ் நிலையத்தில் சுற்றித்திரியும் கால்நடைகள்

Update: 2023-10-29 11:57 GMT

நாகை புதிய பஸ் நிலையம் பகுதியில் கால்நடைகள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இவை இரவு நேரங்களில் பஸ் நிலையத்துக்குள் கூட்டமாக படுத்துக்கொள்கின்றன. பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகளை அச்சுறுத்தும் வகையில் மாடுகள் பஸ் நிலையத்துக்குள் உலா வருகின்றன. இதன்காரணமாக பஸ் நிலையத்தில் பயணிகள் அச்சத்துடன் பஸ்சுக்காக காத்திருக்கும் நிலை உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் சுற்றித்திரியும் கால்நடைகளை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்



மேலும் செய்திகள்