கடலூர் மாநகராட்சி பகுதியில் கொசுத்தொல்லை நாளுக்கு, நாள் அதிகரித்து வருகிறது. இதனால் இரவில் பொதுமக்கள் தூங்க முடியாமல் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் கொசுக்கடிப்பதால் டெங்கு, மலேரியா போன்ற தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. எனவே அப்பகுதியில் கொசுமருந்து அடிப்பது அவசியம்.