ஆற்றின் குறுக்கே பாலம் தேவை

Update: 2023-10-15 14:07 GMT

நாகை மாவட்டம் வடக்கு பொய்கைநல்லூர் கிராமத்தில் பரவைக்கரை ஆறு உள்ளது. இக்கிராம மக்கள் இறந்தவர்களின் உடலை மயானத்துக்கு எடுத்து செல்ல ஆற்றை கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் கழுத்தளவு நீரில் இறங்கி மயானத்துக்கு இறுதிசடங்கு செய்வதற்கு சென்று வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பிரச்சினைக்கு தீர்வு காண ஆற்றின் குறுக்கே பாலம் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.


மேலும் செய்திகள்