பராமரிப்பில்லாத சுடுகாடு கட்டிடம்

Update: 2023-10-15 14:05 GMT

திருவாரூர் மாவட்டம் திருவாதிரைமங்கலம் ஊராட்சியில் மேலசூரனூர் கிராமத்தில் சுடுகாடு கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடம் முறையான பராமரிப்பின்றி காணப்படுகிறது. குறிப்பாக கட்டிடத்தில் உள்ள தூண்கள், மேற்கூரையில் விரிசல்கள் ஏற்பட்டு சிமணெ்டு காரைகள் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகிறது. இதனால் கட்டிடம் எப்போது வேண்டுமானாலும் கீழே விழுந்துவிடும் சூழல் நிலவுகிறது. இதன்காரணமாக சுடுகாடுக்கு இறுதி சடங்கு செய்ய வருபவர்கள் அச்சத்துடன் வந்து செல்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சுடுகாடு கட்டிடத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.



மேலும் செய்திகள்