குளத்தை தூர்வார வேண்டும்

Update: 2023-10-11 08:03 GMT

வில்லுக்குறியில் இருந்து மேலப்பள்ளம் செல்லும் சாலையில் பேயோடு குளம் உள்ளது. இந்த குளத்தை அந்த பகுதி மக்கள் குளிப்பதற்கும் உள்பட பல்வேறு தேவைகளுக்கு பயன்படுத்தி வந்தனர். தற்போது இந்த குளம் முறையாக பராமரிக்காததால் செடி,கொடிகள் வளர்ந்து புதர்போல காட்சி அளிக்கிறது. இதனால், அந்த குளத்தை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, குளத்தை தூர்வாரி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஜெகன், வில்லுக்குறி.

மேலும் செய்திகள்