சேதமடைந்த மின்கம்பம்

Update: 2023-10-11 07:53 GMT

குளச்சல் நகராட்சிக்கு உட்பட்ட சி.எம்.சி. காலனி பகுதியில் சாலையோரம் மின்கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் 2 மின்கம்பங்களின் மேல்பகுதி சேதமடைந்து எப்போது வேண்டுமானாலும் முறிந்து விழும் நிலையில் காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் அச்சத்துடனேயே அந்த பகுதியை கடந்து செல்கின்றனர். எனவே, சேதமடைந்த மின்கம்பங்களை அகற்றி விட்டு புதிய மின்கம்பத்தை நடுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-அபுதாய்ரு, குளச்சல்.

மேலும் செய்திகள்