கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பெரியகோவில் தெரு சன்னதி சந்து பகுதியில் மாடுகள் அதிக அளவில் உலா வருகின்றன. இவை தெருக்களில் சுற்றித்திரிவதோடு, பொதுமக்கள் நடந்து செல்லும் வழிப்பாதையில் படுத்துக்கிடக்கின்றன. இதனால் அப்பகுதி மக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் இதன் காரணமாக அப்பகுதி சுகாதாரமின்றி காணப்படுகிறது. இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் பலனில்லை. எனவே, இதை தவிர்க்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?