சந்தை தேவை

Update: 2023-10-08 11:32 GMT

நாகை மாவட்டம் திருமருகல் சந்தப்பேட்டை கடைத்தெருவில் 20-க்கும் மேற்பட்ட இறைச்சி கடைகள் சாலையோரத்தில் அமைந்துள்ளன. இதனால் வியாபாரிகள் வெயிலினாலும், மழையினாலும் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். இறைச்சி வாங்க வரும் பொதுமக்களும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொதுமக்கள், வியாபாரிகளின் நலன் கருதி மேற்கண்ட பகுதியில் ஆய்வு செய்து இறைச்சி கடைகளுக்கு புதிதாக அப்பகுதியில் சந்தை அமைத்து தர வேண்டும் என கோரிக்கைவிடுத்துள்ளனர்.


மேலும் செய்திகள்