குவிந்து கிடக்கும் குப்பை கழிவுகள்

Update: 2023-10-04 15:16 GMT
பெங்களூரு வர்த்தூர் மாரியம்மன் கோவில் அருகே குடியிருப்பு ஒன்று உள்ளது. இந்த குடியிருப்பு அருகே குப்பை கழிவுகள் குவிக்கப்பட்டு வருகிறது. இதனால் தற்போது அங்கு மலைப்போல் குப்பை கழிவுகள் குவிந்து காணப்படுகிறது. இதனால் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் குப்பை கழிவுகளை கால்நடைகள் கிளறி சாலையில் தள்ளிவிடுவதால் வாகன ஓட்டிகள் அவதி அடைகின்றனர். எனவே மாநகராட்சி அதிகாரிகள் அங்கு குவிக்கப்பட்டுள்ள குப்பை கழிவுகளை உடனே அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்