ஆபத்தான மரத்தை வெட்ட கோரிக்கை

Update: 2023-10-04 11:41 GMT

கரூர் மாவட்டம், நெய்தலூர் இந்திரா நகரில் தாய் செய் நல கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தின் உள்பகுதியில் பழைமையான வேப்பமரம் ஒன்று உள்ளது. இந்த மரம் தற்போது உடைந்து விழும் நிலையில் ஆபத்தாக உள்ளது. தற்போது காற்று காலம் என்பதால் அதிக காற்று அடித்தால் மரம் கீழே விழுந்து விடும். இதானல் தினமும் தாய்சேய் நல அலுவலகத்திற்கு வரும் கர்ப்பிணிகள் அச்சம் அடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.

மேலும் செய்திகள்