தெருநாய்கள் தொல்லை

Update: 2023-10-01 14:55 GMT

ஈரோடு பழையபாளையம் அன்னை நகர் பகுதியில் உள்ள இந்திராகாந்தி வீதியில் ஏராளமான தெருநாய்கள் சுற்றி திரிகின்றன. இதனால் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை தெருவில் நடந்து செல்ல முடியவில்லை. இருசக்கர வாகனங்களிலும் செல்லவும் அச்சமாக உள்ளது. துரத்தி சென்று அனைவரையும் கடித்து வருகின்றன. உடனே தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்