ஒழுகும் பள்ளி கட்டிடம்

Update: 2023-09-27 17:46 GMT

மரக்காணம் அருகே ஏந்தூரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளி கட்டிடம் பலத்த சேதமடைந்து காணப்படுவதால், மழைக்காலங்களில் தண்ணீர் ஒழுகுகிறது. இதனால் வகுப்பறையில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி நிற்பதால், மாணவர்கள் அமர கூட இடம் இல்லாமல், பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கும் சூழ்நிலையும் உருவாகி வருகிறது. எனவே சேதமடைந்த பள்ளி கட்டிடம் சீரமைக்கப்படுமா?

மேலும் செய்திகள்