நடவடிக்கை எடுப்பார்களா?

Update: 2023-09-27 13:12 GMT

சென்னை கோபாலபுரம் அவ்வை சண்முகம் சாலையில் உள்ள டி.ஏ.வி. பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகேயுள்ள நடைபாதையில் பாதாள சாக்கடை மூடி சேதமடைந்த நிலையில் இருக்கிறது. இந்த நடைபாதையை கடந்து தான் பள்ளிக்கு ஏராளமான மாணவிகள் வருகிறார்கள். பல சிறுமிகள் தடுமாறி விழுந்து காயமடைந்துள்ளனர். இதுதொடர்பாக புகார் அளித்தும் இதுவரை எந்த பயனுமில்லை. மழைக்காலம் என்பதால் மேற்கொண்டு விபரீதம் நிகழும் முன்பாக இந்த பிரச்சினைக்கு தீர்வு காண அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்