தெருநாய்களால் பயணிகள் அச்சம்

Update: 2023-09-27 09:11 GMT

சேலம் ரெயில் நிலையத்தில் தினமும் ஏராளமான பயணிகள் வந்து செல்கிறார்கள். இந்தநிலையில் ரெயில் நிலைய நுழைவுவாயில் பகுதியில் தெருநாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. இதனால் பயணிகள் அச்சத்துடனே செல்ல வேண்டி நிலை உள்ளது. சில நேரங்களில் அந்த தெருநாய்கள் பயணிகளை துரத்தி கடிக்கின்றன. எனவே பயணிகள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த தெருநாய்களை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்