சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகள்

Update: 2023-09-24 11:26 GMT

திருவாரூர் மாவட்டம் கீழபனங்காட்டாங்குடி பகுதி சாலையில் கால்நடைகள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இவை இரவு நேரங்களில் சாலை நடுவே படுத்துக்கொள்கின்றனர். இதனை அறியாமல் வாகனங்களில் வருபவர்கள் கால்நடைகள் மீது மோதி விபத்தில் சிக்கிக்கொள்கின்றனர். இதன்காரணமாக அந்த சாலை வழியாக மிகுந்த அச்சத்துடன் சென்று வரக்கூடிய சூழல் உருவாகி உள்ளது. எனவே, வாகன ஓட்டிகள் நலன் கருதி சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரியும் கால்நடைகள் பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்