நாய்கள் தொல்லை

Update: 2023-09-24 11:26 GMT

திருவாரூர் மாவட்டம கூத்தாநல்லூர் கமலாபுரம் கடைவீதியில் நாய்கள் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. இவை கடைவீதிக்கு வரும் பொதுமக்களை விரட்டி சென்று கடிக்கின்றன. வாகனங்களை துரத்தி செல்வதால் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து விடுகின்றனர். இதன்காரணமாக கடைவீதி வழியாக பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.


மேலும் செய்திகள்