படித்துறை சீரமைக்கப்படுமா?

Update: 2023-09-24 11:26 GMT

திருவாரூர் மாவட்டம் கச்சனம் அருகே உள்ள பாமந்தூரில் குளம் உள்ளது. இந்த குளத்தின் படித்துறை முறையான பராமரிப்பின்றி சேதமடைந்து காணப்படுகிறது. குறிப்பாக படித்துறையில் விரிசல்கள் ஏற்பட்டு உடைந்த நிலையில் காணப்படுகிறது. இதனால் படித்துறை இருந்தும் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத சூழல் நிலவுகிறது. எனவே, பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் படித்துறையை சீரமைக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.



மேலும் செய்திகள்