பயணிகள் நிழற்கூடம் வேண்டும்

Update: 2023-09-24 07:49 GMT

தென்காசி- கடையம் மெயின் ரோட்டில் உள்ள மத்தளம்பாறை பிள்ளையார் கோவில் பஸ் நிறுத்தத்தில் இருந்த பயணிகள் நிழற்கூடத்தை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வாறுகால் பணிக்காக இடித்து அகற்றினர். பின்னர் அங்கு புதிய பயணிகள் நிழற்கூடம் அமைக்கப்படவில்லை. இதனால் மத்தளம்பாறை வடக்கு பகுதியில் உள்ள பஸ் நிறுத்தத்தில் அனைத்து பஸ்களும் நின்று செல்கின்றன. இதனால் மத்தளம்பாறை ஊரின் நடுவில் வசிக்கும் மக்கள் 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து வடக்கு பகுதிக்கு சென்று பஸ் ஏறி செல்கின்றனர். எனவே பிள்ளையார் கோவில் பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்கூடம் அமைத்து, அங்கு பஸ்கள் நின்று செல்வதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்