புகார் எதிரொலி

Update: 2023-09-20 14:56 GMT

சென்னை அடையாறு, இந்திரா நகர் ஒன்றாவது அவென்யூ சாலையில் இந்தியன் வங்கி ஏ.டி.எம் அருகில் உள்ள கழிவுநீர் கால்வாய் மூடி சேதமடைந்திருந்தது. இதுகுறித்து 'தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியானதும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து புதிதாக கழிவுநீர் கால்வாய் மூடி அமைத்தனர். உடனடியாக நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், துணை நின்ற ‘தினத்தந்தி‘-க்கும் அப்பகுதி பொதுமக்கள் பாராட்டை தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்