சீரமைக்கப்படுமா?

Update: 2023-04-16 08:04 GMT

தலக்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட அக்கரை சிவன்கோவில் சாலையில் ஊசிக்கிணறு உள்ளது. இந்த கிணற்று தண்ணீரை அந்த பகுதி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது இந்த கிணற்றிற்குள் செடிகள் வளர்ந்தும், அதன் சுற்றுச்சுவர் சேதமடைந்தும் காணப்படுகிறது. எனவே, கிணற்றிற்குள் வளர்ந்துள்ள செடிகளை அகற்றுவதுடன், சுற்றுச்சுவரையும் சீரமைத்து தண்ணீரை சுகாதாரத்துடன் பொதுக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-வி.எஸ்.மூர்த்தி, தலக்குளம்

மேலும் செய்திகள்