அழகியபாண்டியபுரத்தில் கிராம நிர்வாக அலுவலகமும், அந்த வளாகத்திற்குள் வருவாய் ஆய்வாளர் குடியிருப்பும் உள்ளது. இந்த அலுவலக காம்பவுண்டில் அமைக்கப்பட்டிருந்த கேட் சுவருடன் சேர்ந்து ஒகி புயலின்போது சேதமடைந்தது. அதன்பிறகு அவை சீரமைக்கப்படவில்லை. இதனால், இரவு நேரம் அங்கு சமூக விரோத செயல்கள் நடைபெற வாய்ப்புகள் உள்ளன. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சேதமடைந்த சுவர், கேட்டை சீரமைப்பார்களா?.