விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பில் இருந்து ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் செல்ல போதுமான பஸ்வசதி இல்லை. இதனால் இப்பகுதியில் உள்ள மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். ஆதலால் மேற்கண்ட வழித்தடத்தில் கூடுதலாக பஸ் இயக்க நடவடிக்கை எடுப்பார்களா?