நாய்கள்அட்டகாசம்

Update: 2022-10-02 14:50 GMT

நாகை மாவட்டத்தில் உள்ள வேளாங்கண்ணி பேரூராட்சி  7-வது வார்டு ஆரிய நாட்டு வடக்கு தெருவில் நாய்கள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இவை அந்த பகுதியில் வளர்க்கப்படும் ஆடு, கோழிகளை வேட்டையாடுகின்றன. சாலையில் நடந்து செல்லும் சிறுவர்களை விரட்டி சென்று கடிக்கின்றன. மேலும், வாகனங்களை துரத்தி செல்வதால் வாகன ஓட்டிகள் விபத்துகளில் சிக்கிக்கொள்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து செல்ல நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்